சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் கோவிலில் தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தை பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் முருகன் ஆலயத்தில் ஒன்று கூடி வாசலில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படையலிட்டனர்
சிட்னி மாநகரில் உள்ள மேஸ் ஹில் எனும் இடத்தில் உள்ள முருகன் செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு மூலவர் முருகனுக்கான அபிசேகத்தினைத் தொடர்ந்து கோபுர வாசலில் 5:45 மணிக்கு பொங்கல் பானை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 7:00 மணி காலைப் பூஜையினைத் தொடர்ந்து 7:15 மணிக்கு சூரிய பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து, 11:00 மணிக்கு கூட்டு வழிபாட்டினைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூஜை இடம்பெற்றது.
தைப் பொங்கலை ஒட்டி காலையில் இருந்து இரவு வரை சிட்னியில் வாழ்ந்து வரும் இலங்கை, இந்திய, சிங்கப்பூர், பிஜி மற்றும் மலேசிய நாட்டு வாழ் இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிட்னி மாநகரில் இருந்து மேஸ் ஹில் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆண்டு தோறும் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சிட்னி மாநகரில் உள்ள மேஸ் ஹில் எனும் இடத்தில் உள்ள முருகன் செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு மூலவர் முருகனுக்கான அபிசேகத்தினைத் தொடர்ந்து கோபுர வாசலில் 5:45 மணிக்கு பொங்கல் பானை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 7:00 மணி காலைப் பூஜையினைத் தொடர்ந்து 7:15 மணிக்கு சூரிய பூஜை இடம்பெற்றது.
தொடர்ந்து, 11:00 மணிக்கு கூட்டு வழிபாட்டினைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூஜை இடம்பெற்றது.
தைப் பொங்கலை ஒட்டி காலையில் இருந்து இரவு வரை சிட்னியில் வாழ்ந்து வரும் இலங்கை, இந்திய, சிங்கப்பூர், பிஜி மற்றும் மலேசிய நாட்டு வாழ் இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிட்னி மாநகரில் இருந்து மேஸ் ஹில் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆண்டு தோறும் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.