RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ராதா ஐதராபாத்துக்கு ஓட்டம்: போலீஸ் திண்டாட்டம்!

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:06 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்த ராதா, இப்போது போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் திடீரென்று கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் கொடுத்தார். திருவல்லிக்கேனியைச் சேர்ந்த பைசூல் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார். 50 லட்சம் ரூபாய் பணத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டார் என்று கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடபழனி போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அவர்களும் வழக்கு பதிவு செய்து பைசூலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்த ராதா போலீசார் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றும், அவரை கைது செய்யாமல் ஏமாற்றுவதாகவும் புகார் கூறினார். அதன் பிறகு திடீரென்று வடபழனி காவல் நிலையம் சென்றவர். ஆயிரம் இருந்தாலும் பைசூல் என் கணவர் என்று கூறி புகாரை வாபஸ் பெற்றார்.

அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் கமிஷனர் அலுவலகம் வந்து பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்தார். ராதாவுக்கும், பைசூலுக்கும் இடையில் என்னதான் பிரச்னை என்று தெரியாமல் போலீசார் தவிக்கிறார்கள். இருவரையும் ஒரே நேரத்தில் அழைத்து விசாரித்தால்தான் உண்மை தெரியும் என்று அதற்காக முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் பைசூல் மீது மீண்டும் புகார் கொடுத்த ராதா யாருக்கும் தெரியாமல் ஐதராபாத்துக்கு சென்று விட்டார். அங்கு ஒரு முக்கிய புள்ளியின் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும், உறவினர்கள் பாதுகாப்பில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். பைசூல் ஆட்களின் கொலை மிரட்டலுக்கு பயந்தே அவர் பாதுகாப்பு தேடிச் சென்று விட்டதாகவும் கூறுகிறார்கள். பைசூல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த பிரச்னையில் அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியாமல் போலீசார் திண்டாடி வருகிறார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT