டெல்லி: நான் பிறந்தபோது, பெண் குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்று கூறி என்னை கொல்லுமாறு எனது தாய்க்கு சிலர் அறிவுரை கூறினர் என்று மத்திய மனித வள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
இந்தி நடிகையும், மத்திய மனித வள அமைச்சருமான ஸ்மிருதி இரானி கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அப்போது மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து இரானி கூறிய பதில்கள் இவைதான்:
நான் பிறந்தபோது, எனது தாயிடம் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள், என்னை கொன்றுவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். பெண் குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்பதால் அதை வளர்க்க வேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் எனது தாய் தைரியசாலி. எனது குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும் என்று கூறி என்னை வளர்த்தார். இதன் காரணமாகவே உங்கள் முன்னால் நான் இப்படி அமைச்சராக நிற்க முடிகிறது.
பெண் சிசு கொலையை கட்டுப்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். ஒரு பெண் கல்வி பயின்றால் அது அவளோடு நிற்காது. அந்த குடும்பத்துக்கே அறிவு கிடைக்கும். இதன் மூலம், நாடு விரைவில் வளர்ச்சியடையும். வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க, ஏட்டுக் கல்வியுடன், நடைமுறைக்கு தேவைப்படும் கல்வியையும் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
வறுமையை கண்டு மாணவ, மாணவிகள் பயந்துவிடாதீர்கள். நமது பெற்றோர் அதிக கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவில்லையே என்று யாரும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். நானும்கூட நடுத்தர குடும்பத்தில் பிறந்துதான் இப்போது அமைச்சராகியுள்ளேன். நமது பிரதமர் நரேந்திரமோடி சிறு வயதில் டீ விற்பனை செய்து வாழ்க்கை நடத்தியவர். திறமையான மாணாக்கர்களுக்கு அரசே கல்வி உதவித்தொகை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தி நடிகையும், மத்திய மனித வள அமைச்சருமான ஸ்மிருதி இரானி கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அப்போது மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து இரானி கூறிய பதில்கள் இவைதான்:
நான் பிறந்தபோது, எனது தாயிடம் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள், என்னை கொன்றுவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். பெண் குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்பதால் அதை வளர்க்க வேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் எனது தாய் தைரியசாலி. எனது குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும் என்று கூறி என்னை வளர்த்தார். இதன் காரணமாகவே உங்கள் முன்னால் நான் இப்படி அமைச்சராக நிற்க முடிகிறது.
பெண் சிசு கொலையை கட்டுப்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். ஒரு பெண் கல்வி பயின்றால் அது அவளோடு நிற்காது. அந்த குடும்பத்துக்கே அறிவு கிடைக்கும். இதன் மூலம், நாடு விரைவில் வளர்ச்சியடையும். வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க, ஏட்டுக் கல்வியுடன், நடைமுறைக்கு தேவைப்படும் கல்வியையும் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
வறுமையை கண்டு மாணவ, மாணவிகள் பயந்துவிடாதீர்கள். நமது பெற்றோர் அதிக கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவில்லையே என்று யாரும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். நானும்கூட நடுத்தர குடும்பத்தில் பிறந்துதான் இப்போது அமைச்சராகியுள்ளேன். நமது பிரதமர் நரேந்திரமோடி சிறு வயதில் டீ விற்பனை செய்து வாழ்க்கை நடத்தியவர். திறமையான மாணாக்கர்களுக்கு அரசே கல்வி உதவித்தொகை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.