கிருஷ்ணகிரி: கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் நாமக்கல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி அருகே சின்னேபள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வரன் (55). கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் நிலவியது. இந்நிலையில், நாமக்கல் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் ஐஸ்வர்யா (19) கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனிடம், கல்லூரி கட்டணம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், பொங்கல் முடிந்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜாகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் நிலவியது. இந்நிலையில், நாமக்கல் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் ஐஸ்வர்யா (19) கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனிடம், கல்லூரி கட்டணம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், பொங்கல் முடிந்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜாகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.