கொழும்பு: 'இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 275 தமிழர்கள், ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார்கள், என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக, தமிழக முதல்வர், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது:
இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள், அதிநவீன வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கைக்கு, கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே தான், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
இலங்கை சிறையில், 275 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல, இந்திய சிறையில், 212, இலங்கை மீனவர்கள் உள்ளனர்.தமிழக முதல்வர் கூறியது போல, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, உடனடியாக விடுவிக்க முடியாது.
இலங்கையின் சட்ட நிபுணர்கள், கடற்படை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், என்னுடைய தலைமையில், இந்திய அரசை சந்திக்க உள்ளனர். இம்மாதம், 14ம் தேதிக்கு முன்னதாக, பேச்சுவார்த்தை நடக்கும். அதன் பின், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.இவ்வாறு, ரஜினா சேனரத்னே கூறினார்.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 275 தமிழர்கள், ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார்கள், என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக, தமிழக முதல்வர், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது:
இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள், அதிநவீன வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கைக்கு, கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே தான், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
இலங்கை சிறையில், 275 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல, இந்திய சிறையில், 212, இலங்கை மீனவர்கள் உள்ளனர்.தமிழக முதல்வர் கூறியது போல, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, உடனடியாக விடுவிக்க முடியாது.
இலங்கையின் சட்ட நிபுணர்கள், கடற்படை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், என்னுடைய தலைமையில், இந்திய அரசை சந்திக்க உள்ளனர். இம்மாதம், 14ம் தேதிக்கு முன்னதாக, பேச்சுவார்த்தை நடக்கும். அதன் பின், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.இவ்வாறு, ரஜினா சேனரத்னே கூறினார்.