டெல்லி: டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்திக்கும் சர்ச்சைக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு.. டெல்லியில் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரை, நரேந்திர மோடியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக கூறியிருக்கிறார் சோம்நாத் பார்தி.
டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில் சென்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சில ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி, டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங், சோம்நாத் பார்திக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார்.
ஆனால், சோம்நாத் பார்தி டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். இருப்பினும் அமைச்சரின் அங்கீகார கடிதம் இல்லாமல் வழக்கறிஞர் ஆஜராகுவதற்கு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஆணைய தலைவர் பர்கா சிங்குக்கும், சட்ட அமைச்சரின் வழக்கறிஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில்,சோம்நாத் பார்தியிடம் இன்று டெல்லி செய்தியாளர்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பொறுமையை இழந்த அவர், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு இதுபோன்று நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்.. மோடியிடம் இருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் செய்தியாளர்கள் கொந்தளித்தனர். பின்னர் சோம்நாத் மன்னிப்பு கேட்க சர்ச்சை முடிவுக்கு வந்தது.
டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில் சென்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சில ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி, டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங், சோம்நாத் பார்திக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார்.
ஆனால், சோம்நாத் பார்தி டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். இருப்பினும் அமைச்சரின் அங்கீகார கடிதம் இல்லாமல் வழக்கறிஞர் ஆஜராகுவதற்கு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஆணைய தலைவர் பர்கா சிங்குக்கும், சட்ட அமைச்சரின் வழக்கறிஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில்,சோம்நாத் பார்தியிடம் இன்று டெல்லி செய்தியாளர்கள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பொறுமையை இழந்த அவர், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு இதுபோன்று நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்.. மோடியிடம் இருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் செய்தியாளர்கள் கொந்தளித்தனர். பின்னர் சோம்நாத் மன்னிப்பு கேட்க சர்ச்சை முடிவுக்கு வந்தது.