சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா முன்னேறினார். நேற்று நடந்த காலிறுதியில், சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனியை தோற்கடித்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சென்னையில், ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற ஆண்களுக்கான 19வது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்–8’ வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனி மோதினர். அபாரமாக ஆடிய வாவ்ரின்கா 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
300வது வெற்றி:
இது, ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில், வாவ்ரின்காவின் 300வது வெற்றி. இதன்மூலம் 300 அல்லது அதற்கு மேல் வெற்றி பெற்ற 4வது சுவிட்சர்லாந்து வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ரோஜர் பெடரர் (923 வெற்றி), மார்க் ராசட் (433), ஜாகப் ஹலாசக் (432) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.
பாம்ப்ரி ஏமாற்றம்:
மற்றொரு காலிறுதியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, கனடாவின் வசக் பாஸ்பிசில் மோதினர். இதில் யூகி பாம்ப்ரி 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வௌியேறினார்.இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
ரோஜர்–வாசலின் வெற்றி:
மற்றொரு காலிறுதியில், பிரான்சின் ரோஜர்–வாசலின், இஸ்ரோலின் டுடி செலா மோதினர். இதில், ரோஜர்–வாசலின் 7–5, 6–7, 6–0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கிரானலர்ஸ் முன்னேற்றம்:
மற்றொரு காலிறுதியில், ஸ்பெயினின் மார்சல் கிரானலர்ஸ், பிரான்சின் பெனாய்ட் பெய்ரே மோதினர். அபாரமாக ஆடிய கிரானலர்ஸ் 6–2, 3–6, 7–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந்திய ஜோடி ‘அவுட்’:
நேற்று நடந்த இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, குரோஷியாவின் மரின் டிராகன்ஜா, மேட் பவிக் ஜோடியிடம் 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வௌியேறியது.
போபண்ணா ஜோடி ஏமாற்றம்:
நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, இந்தியாவின் சகேத் மைனேனி, ரஷ்யாவின் கரென் கசானவ் ஜோடியிடம் 5–7, 6–2, 10–12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றியது.
மைனேனி ஜோடி தோல்வி:
நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சகேத் மைனேனி, ரஷ்யாவின் கரென் கசானவ் ஜோடி 4–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில், சுவீடனின் ஜோகன் பர்ன்ஸ்டிரோம், டென்மார்க்கின் நீல்சன் ஜோடியிடம் தோல்விஅடைந்தது.
சென்னையில், ஏ.டி.பி., அந்தஸ்து பெற்ற ஆண்களுக்கான 19வது சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்–8’ வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனி மோதினர். அபாரமாக ஆடிய வாவ்ரின்கா 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
300வது வெற்றி:
இது, ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில், வாவ்ரின்காவின் 300வது வெற்றி. இதன்மூலம் 300 அல்லது அதற்கு மேல் வெற்றி பெற்ற 4வது சுவிட்சர்லாந்து வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ரோஜர் பெடரர் (923 வெற்றி), மார்க் ராசட் (433), ஜாகப் ஹலாசக் (432) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.
பாம்ப்ரி ஏமாற்றம்:
மற்றொரு காலிறுதியில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, கனடாவின் வசக் பாஸ்பிசில் மோதினர். இதில் யூகி பாம்ப்ரி 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வௌியேறினார்.இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
ரோஜர்–வாசலின் வெற்றி:
மற்றொரு காலிறுதியில், பிரான்சின் ரோஜர்–வாசலின், இஸ்ரோலின் டுடி செலா மோதினர். இதில், ரோஜர்–வாசலின் 7–5, 6–7, 6–0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கிரானலர்ஸ் முன்னேற்றம்:
மற்றொரு காலிறுதியில், ஸ்பெயினின் மார்சல் கிரானலர்ஸ், பிரான்சின் பெனாய்ட் பெய்ரே மோதினர். அபாரமாக ஆடிய கிரானலர்ஸ் 6–2, 3–6, 7–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இந்திய ஜோடி ‘அவுட்’:
நேற்று நடந்த இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, குரோஷியாவின் மரின் டிராகன்ஜா, மேட் பவிக் ஜோடியிடம் 3–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வௌியேறியது.
போபண்ணா ஜோடி ஏமாற்றம்:
நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி, இந்தியாவின் சகேத் மைனேனி, ரஷ்யாவின் கரென் கசானவ் ஜோடியிடம் 5–7, 6–2, 10–12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றியது.
மைனேனி ஜோடி தோல்வி:
நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் சகேத் மைனேனி, ரஷ்யாவின் கரென் கசானவ் ஜோடி 4–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில், சுவீடனின் ஜோகன் பர்ன்ஸ்டிரோம், டென்மார்க்கின் நீல்சன் ஜோடியிடம் தோல்விஅடைந்தது.